search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநள்ளாறு கும்பாபிஷேகம்"

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தனி சன்னதியில் சனீஸ்வரர் வீற்றிருக்கும் தர்பாரண்யேசுவரர் கோவில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்த யாகசாலை மண்டபம் அமைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. நேற்று (ஞாயிற்றுகிழமை) காலை 6-ம் கால பூஜையும், இரவு 7-ம் கால பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து இன்று (திங்கட் கிழமை) அதிகாலை 4 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெறுகின்றன. இதைத்தொடர்ந்து, காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் கோபுரக் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ஊர்களில் இருந்து பஸ் போக்குவரத்தும் செய்யப்பட்டுள்ளது. எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை கண்டாலும், பக்தர்கள் மீது ஸ்பிரே முறையில் புனிதநீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று பக்தர்கள் எந்த கட்டணமும் இன்றி சாமி தரிசனம் செய்யலாம்.
    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கோபுரத்தில் கலசங்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றது. இதையொட்டி நாளை காலை கும்பாபிஷேகம் நடக்கிறது.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தனி சன்னதியில் சனீஸ்வரர் வீற்றிருக்கும் தர்பாரண்யேஸ் வரர் கோவில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபம் அமைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6-ம் கால பூஜையும், இரவு 7-ம் கால பூஜையும் நடைபெறவுள்ளன. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெறுகின்றன. இதைத்தொடர்ந்து, காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகம் குறித்து மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த்ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சனீஸ்வரர் தனி சன்னதி கொண்ட தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இறுதிகட்ட பணிகளாக கோபுரங்களில் கலசங்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப் படுகிறது. பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    சனீஸ்வர பகவான் சன்னதியில் கருங்கல் மண்டபம் அமைக்கும் பணிகளை நிறைவு செய்தல், விழாவிற்கு, வரும் பக்தர்கள் திருநள்ளாறு பகுதியில் உள்ள அனைத்து நிரந்தர, தற்காலிக கழிப்பறைகளை தயார் நிலைக்கு கொண்டு வருதல், மாவட்ட போக்குவரத்து துறை மூலம் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளை உறுதி செய்துள்ளோம்.

    எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை கண்டாலும், பக்தர்கள் மீது ஸ்பிரே முறையில் புனிதநீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் பக்தர்கள் எந்த கட்டணமும் இன்றி சாமி தரிசனம் செய்யலாம். சனிப்பெயர்ச்சி விழாவின்போது செய்யப்பட்ட விரிவான வசதிகள் கும்பாபிஷேகம் விழாவிலும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வரும் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி 8 கால யாகசாலை பூஜைகள் நடத்தும் வகையில் கோவில் வளாகத்தில் பிரமாண்டமான யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.

    கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 5-ந் தேதி வாஸ்து சாந்தி பூஜையும், 6-ந் தேதி தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை 9 மணியளவில் ஆச்சார்ய ரஷாபந்தனம், அக்னி சங்ரகணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் அடங்கிய கலசங்கள் யாகசாலை மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இதன்பின் வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



    இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 4-ம் கால யாகசாலை பூஜை, மாலை 5-ம் கால யாகசாலை பூஜை, 10-ந் தேதி காலை 6-ம் கால யாகசாலை பூஜை, மாலை 7-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜையும், காலை 9.10 மணிக்கு மேல் 10.10 மணிக்குள் மகாகும்பாபிஷேகமும் நடக்கிறது.
    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 11-ந் தேதி காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த் ராஜா செய்து வருகிறார்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி பூஜையும், நேற்று தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா நேற்று கும்பாபிஷேகத்திற்கு செய்யப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. இந்த விழாவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி வருகிற 11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகசாலை நிறைவு பெறுகிறது.

    இதனால் இன்று முதல் கும்பாபிஷேகம் முடியும் வரை சன்னதி வழியாக சாமி தரிசனம் செய்ய இயலாது. அதனால் யாகசாலை பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யலாம். விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, பஸ், அன்னதானம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவிலின் எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை தரிசித்தாலும் அவர்கள் மீது புனிதநீர் தெளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×